ஆப்நகரம்

திலீப் - காவ்யா மாதவன் மகளுக்கு மஞ்சு வாரியார் மகள் வைத்த பெயர் இதுதான்..!!

திலீப் - காவ்யா மாதவன் தம்பதி மகளுக்கு கேரளாவில் பெயர் சூட்டும் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.

Samayam Tamil 18 Nov 2018, 11:07 pm
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான திலீப் 2015ம் ஆண்டு நடிகை மஞ்சு வாரியாரிடமிருந்து விவகாரத்து பெற்றார். துபாயை சேர்ந்த தொழிலதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்ட காவ்யா மாதவன், 2010ம் ஆண்டில் அவரிடமிருந்து விவகாரத்து பெற்றார்.
Samayam Tamil dilee-cover-pic


ஏற்கனவே பல மலையாள திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள திலீப் மற்றும் காவ்யா மாதவன், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் திலீப், மஞ்சு வாரியாருக்கு பிறந்த மகள் மீனாட்சி சம்மத்துடன், கடந்த 2016ம் ஆண்டு கொச்சியில் திலீப் - காவ்யா மாதவன் திருமணம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து முன்னணி நடிகை ஒருவரை கடத்தி, பாலியல் துன்புறுத்துலுக்கு உட்படுத்திய வழக்கில் நடிகர் திலீப்பை கேரளா காவல்துறை கைது செய்தது. சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அவரை மலையாள நடிகர் சங்கமும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.

இதற்கிடையில் நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம் அடைந்தார். பிணையில் திலீப் வெளியே வந்த சிறிய காலத்தில் கடந்த மாதம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட திலீப், எனது மகள் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள் என தெரிவித்தார்.

தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா கொச்சியில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் திலீப் - காவ்யா தம்பதியின் நெருங்கி உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் மூத்த மகள் மீனாட்சி பரிந்துரைத்த மகாலட்சுமி என்ற பெயரை திலீப் தனது இளைய மகளுக்கு சூட்டியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்