ஆப்நகரம்

நாற்காலி படத்தில் அரசியல்வாதியான அமீர்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

வட சென்னை படத்தைத் தொடர்ந்து நாற்காலி படத்தில் நடிக்கும் இயக்குநர் அமீர் அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார்.

Samayam Tamil 3 Dec 2019, 11:21 am
இயக்குநர் ராம் இயக்கத்தில் வந்த மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றவை. ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், யோகி மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
Samayam Tamil Vijay Thalapathy


தற்போது வட சென்னை படத்தைத் தொடர்ந்து, நாற்காலி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதுவும், அரசியல்வாதியாம். இதற்கு முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் அரசியல்வாதியாக நடித்துள்ளனர். அந்த வரிசையில், தற்போது இயக்குநர் அமீரும் அரசியல்வாதியாகவே நடிக்கிறார்.

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் – பிரபு காம்பினேஷனில் வந்த குரு சிஷ்யன் படத்தில், இருவருமே சிறைக்கு சென்றிருப்பார்கள். அங்கு, நாற்காலிக்கு சண்டை போட்டுக்கொண்டிருக்கும் கைதிகளைப் பார்த்து, ரஜினிகாந்த் நாற்காலிக்கு சண்டை போடும் நாமெல்லாம் பைத்தியம்தாண்டா என்ற பாடலை பாடுவார்.

பூஜையுடன் தொடங்கியது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி பட ஷூட்டிங்: ஹீரோயின் யார் தெரியுமா?

தற்போது அமீர் நடிக்கும் படத்திற்கு இந்த பாடலில் வரும் நாற்காலி என்ற தலைப்பை படக்குழுவினர் வைத்துள்ளனர். அதுவும், அரசியல்வாதிக்கும், நாற்காலிக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில், இந்த டைட்டில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வி.இசட் துரை இந்தப் படத்தை இயக்குகிறார். மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா இப்படத்தை தயாரிக்கிறார். அரசியல்வாதியாக நடிக்கும் அமீரின் இந்த நாற்காலி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதில், அமீர் தனது இடது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களில் மோதிரம் அணிந்துள்ளார். மேலும், ஜனங்களைப் பார்த்து கையெடுத்து கும்பிடுவது போன்று இந்த போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீ எல்லாம் இவ்வளவு பெரிய நடிகன் ஆவன்னு எதிர்பார்க்கலடா: யோகி பாபுவை கலாய்த்த சந்தானம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்