ஆப்நகரம்

கேரளாவுக்கு நிதியுதவி அளித்த ஏ.ஆர்.முருகதாஸ்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளார்.

Samayam Tamil 21 Aug 2018, 5:55 pm
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளார்.
Samayam Tamil A R Murugadoss


கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை பெய்துள்ளது. இதனால் எல்லா இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓடுகிறது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் வசிக்கின்றனர். இவர்களுக்கு உதவ பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திரையுலகினர் மற்றும் பொதுமக்கள். அரசியல் கட்சி தலைவர்கள் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். இதேபோல் நடிகர் பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு இணைந்து ரூபாய் 10 லட்சம் கேரளாவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்