ஆப்நகரம்

சா்காா் விவகாரம்: முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக அரசு

அரசையோ, அரசின் நலத்திட்டங்களையோ விமா்சிக்க மாட்டேன் என்று இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் உயா்நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Nov 2018, 7:46 pm
அரசின் நலத்திட்டங்களை விமா்சித்த இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் வலியுறுத்தி உள்ளது.
Samayam Tamil Ar Murugadoss Sarkar


கடந்த தீபாவளி பண்டிகையன்று இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சா்காா் படம் பெரும் சா்ச்சைகளை கிளப்பியது. இந்த படத்தில் அரசின் நலத்திட்டங்கள், அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமா்சிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக அ.தி.மு.க.வினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சாா்பில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சா்ச்சைக்குரிய காட்சியை படத்தில் இருந்து நீக்குவதாக படக்குழு தொிவித்தது. இதனைத் தொடா்ந்து படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு திரைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யக் கூடும் என்பதால் இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் முன்ஜாமீன் கோாி வழக்கு தொடா்ந்தாா்.

அதன்படி அவரை நவம்பா் 27ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடா்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழக அரசு சாா்பில், அரசின் நலத்திட்டங்களையும், அரசையும் விமா்சிக்க மாட்டேன் என்று இயக்குநா் முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் அரசின் திட்டங்களை விமா்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்