ஆப்நகரம்

#AskAtlee: அஜித் ரசிகர்களை கவர புதிய திட்டம் போட்ட அட்லி!

பிகில் படம் நாளைக்கு வெளியாக உள்ள நிலையில், இன்று ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குநர் அட்லி பதிலளித்தார். அப்போது அஜித் பற்றியும் பேசியுள்ளார்.

Samayam Tamil 24 Oct 2019, 8:52 pm
தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள 3 ஆவது படம் பிகில். கோடான கோடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த படம் பிகில். கிட்டத்தட்ட ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாகவே ரூ.136.55 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
Samayam Tamil Thala Ajith


அட்லி என் கதையை சுட்டுட்டார், பிகிலுக்கு தடை விதிக்கணும்: மேலும் ஒருவர் வழக்கு

இந்த நிலையில், பிகில் படம் குறித்தும், தனது அனுபவம் குறித்தும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இயக்குநர் அட்லி பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், தல அஜித் பற்றி ஒரு சொல் என்று கேட்கவே, அதற்கு அஜித் மீது மிகுந்த மரியாதை உண்டு. விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகியவை எனக்கு அண்மையில் பிடித்த படங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Bigil: ரசிகர்களின் கேள்விகளுக்கு காரசாரமாக பதிலளித்த இயக்குநர் அட்லி!

இதன் மூலம், அஜித் ரசிகர்களை கவருவதற்கு அட்லி போட்ட புதிய திட்டம் இது என்று பலரும் கூறி வருகின்றனர். பிகில் படம் முழு கேங்ஸ்டர் படம் என்றும் ராயப்பன் கதாபாத்திரம் தான் தனக்கு பிடித்த கதாபாத்திரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ராயப்பன், பிகில், மைக்கேல் என்று மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக விஜய், மெர்சல் படத்தில் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி மனைவிக்கு பிகில் ஸ்பெஷல் கிப்ட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி!

பல தடைகளையும் தாண்டி இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் கே பி செல்வா வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது, சூளைமேட்டைச் சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவரும் கதை தன்னுடையது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்