ஆப்நகரம்

‘மெர்சல்’ படத்தை அடுத்து தெலுங்கில் கால்பதிக்கும் இயக்குனர் அட்லி!

‘மெர்சல்’ படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி, அடுத்ததாக தெலுங்கு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 3 Apr 2018, 3:15 pm
‘மெர்சல்’ படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி, அடுத்ததாக தெலுங்கு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil atlee


இயக்குனர் அட்லி தமிழில் கடைசியாக இயக்கிய படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் விஜய் மூன்று கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா என பல சர்ச்சைகளுக்கு நடுவே நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி படம் வெளியானது. ஆனால் விஜய் மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்பதை நிரூபித்து காட்டினார். ஆனால் படத் தயாரிப்பாளருக்கு அட்லியால் 15லிருந்து 20 கோடிவரை நஷ்டம். படத்தை பட்ஜெட்டை தாண்டி கொண்டு போய்விட்டார் என சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் தயாரிப்பு நிர்வாகம் படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளது.

தற்போது அட்லியின் தனது அடுத்த படத்தை கையிலெடுத்துள்ளார். அவர் இனி தெலுங்கு படத்தை தான் இயக்கப்போகிறாராம். மேலும் முன்னணி நடிகரை வைத்து படம் எடுக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். சில நாட்கள் காத்திருங்கள் நல்ல செய்தியை அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்