ஆப்நகரம்

யாரு கண்ணு பட்டுச்சோ... புலம்பும் முன்னாள் மனைவி... 'அதில்' உறுதியாய் இருக்கும் இயக்குநர் பாலா!

இயக்குநர் பாலாவை விவகாரத்து செய்த முத்துமலர் சொந்த பந்தங்களிடம் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 12 Apr 2022, 12:53 pm
இயக்குநர் பாலா தன்னை நன்றாகதான் பார்த்துக் கொண்டார் என அவரது முன்னாள் மனைவியான முத்துமலர் தற்போது ஃபீல் பண்ணி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil director bala not interested in second marriage
யாரு கண்ணு பட்டுச்சோ... புலம்பும் முன்னாள் மனைவி... 'அதில்' உறுதியாய் இருக்கும் இயக்குநர் பாலா!



படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த பாலா, சேது படத்தின் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் பாலா. தற்போது சூர்யாவின் 41வது படத்தை இயக்கி வருகிறார்.

விவாகரத்து

சமீபத்தில் இயக்குநர் பாலாவு அவரது மனைவி முத்துமலரும் விவாகரத்து பெற்றனர். கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது சட்டப்படி விவகாரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பிறகு பாலாவின் மகள் அவரது அம்மா முத்துமலருடன் உள்ளார்.

பெரும்புள்ளி

முத்துமலருக்கு அரசியல் பெரும்புள்ளி ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கமே விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்டது. தற்போது அந்த அரசியல் வாரிசு, முத்துமலரிடம் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கணவர் தன்னை நன்றாக தான் பார்த்துக் கொண்டார் என்றும் யார் கண் பட்டதோ இப்படி ஆகிவிட்டது என தனது சொந்த பந்தங்களிடம் கூறி வருகிறாராம்.

மகள் போதும்

ஆனால் இயக்குநர் பாலாவோ தனக்கு தன் மகள் மட்டும் இனி போதும் அவர் தான் இனி எதிர்காலம் என கூறிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இயக்குநர் பாலா இரண்டாவது திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்