ஆப்நகரம்

கொரோனா பிரச்சனை: இயக்குனர் பாரதிராஜா செய்த உதவி

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது முகமூடி, கையுறைகள் போன்றவற்றை வாங்கி மருத்துவர்கள், போலீஸ், துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுத்துள்ளார்.

Samayam Tamil 2 Apr 2020, 2:42 pm
உலகம் முழுவதும் பல ஆயிரம் உயிர்களை பலி வாங்கிவரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன.
Samayam Tamil Bharathiraja


இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 1965 ஆக உள்ளது. அதில் 50 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் உதவும் விதமாக பல்வேறு சினிமா துறை பிரபலங்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ருபாய் வழங்கியுள்ளார். மேலும் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ருபாய் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாரதிராஜா சானிடைசர், முகமூடி, கையுறை போன்றவரை வாங்கி மருத்துவர்கள், போலீஸ், தூய்மை பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார்.


"உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் அசாதாரண நெருக்கடியையும் பொருட்படுத்தாது, இந்த கொடிய நோயின் பரவலை திறம்பட கட்டுப்படுத்த நமது தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. நன்றியுணர்வின் ஒரு சிறிய அடையாளமாக காவல்துறையினர், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கியுள்ளேன்" என பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துளளார்.

முகமூடி, கையுறை எதுவும் இல்லாமல் மருத்துவர்கள், தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் சிரமப்படுவதாக தொடர்ந்து செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பாரதிராஜா செய்துள்ள உதவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்