ஆப்நகரம்

தமிழக அரசுக்கு நன்றி சொன்ன பாரதிராஜா!!

சிவாஜி கணேசன் பற்றிய பாடம் தமிழக பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டதற்கு இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 6 Jun 2019, 2:37 pm
சிவாஜி கணேசன் பற்றிய பாடம் தமிழக பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டதற்கு இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil bhaath


இயக்குநர் இமயம் பாரதிராஜா தன் மனதில் இருப்பதை அப்படியே சொல்லக்கூடியவர். பலநேரங்களில் அதனால் பிரச்சனையில் சிக்கக்கூடியவர். முன்பு பல நேரங்களில் ஆளும்கட்சி அமைச்சர், முதல்வர்களை விமர்சித்து பிரச்சனையில் சிக்கியுள்ளார். இப்போதைய தமிழகஅரசாங்கத்தை பல விதமாக விமர்சித்துள்ளார். சீமானுக்கு ஆதரவாகபேசி வரும் அவர் தற்போது தமிழக அரசை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய பாடம் தமிழக பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காகத்தான் அவர் தமிழக அரசுக்கு நன்றி கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...

என் இனிய தமிழ்மக்களே,

உலகின் மாபெரும் கலைஞன், தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் மூலம் நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்ட செவாலியர் சிவாஜி கணேசன் பற்றி மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு தான் சந்தித்த அனுபவங்களை தொகுத்து “சிதம்பர நினைவுகள் என்கின்ற நூலாகவெளியிட்டார்.

இந்த நூலில் மாமேதை சிவாஜி கணேசனின் நடிப்புத் திறன், அவரின் கலை உலக அனுபவங்கள், அவர் பெற்ற விருதுகள் என பல தகவல்களை எழுதியுள்ளார். இதனை தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களை கொண்டு, புதிதாக உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடநூலில் சிவாஜி கணேசனுக்கு புகழ் சேர்க்கும் விதமாகவும், இளம் தலைமுறை மாணவர்கள் அவரின் கலைத்திறனை அறிந்து கொள்ளும் விதமாகவும் அவரைப் பற்றி பாடத்திட்டத்தில் சேர்த்து சிறப்பித்த தமிழக அரசுக்கு திரைப்படத்துறையின் மூத்த கலைஞன் என்கின்ற முறையில் கலையுலகம் சார்பாகவும், என் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்