ஆப்நகரம்

செக் மோசடி வழக்கு: சிவகாசி கோர்ட்டில் சேரன் ஆஜர்!

சினிமா இயக்குனர் சேரன், செக் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, சிவகாசி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

TNN 31 May 2016, 7:00 pm
சினிமா இயக்குனர் சேரன், செக் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, சிவகாசி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
Samayam Tamil director cheran appeared in sivakasi magistrate court
செக் மோசடி வழக்கு: சிவகாசி கோர்ட்டில் சேரன் ஆஜர்!


இயக்குனர் சேரன் சமீபத்தில் இயக்கி, நடித்திருந்த படத்திற்கு போஸ்டர் அடிப்பதற்காக, ரூ.20 லட்சம் மதிப்புடைய காசோலை கொடுத்திருந்தார். எனினும், அந்த வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால், காசோலை திரும்பி வந்ததால், பாதிக்கப்பட்ட நபர் சிவகாசி நீதிமன்றத்தில் சேரன் மற்றும் அவருடைய மகள் நிவேதா மீது வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக இன்று இருவரும் சிவகாசி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சேரன் தரப்பு மேலும் கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, இவ்வழக்கு ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்