ஆப்நகரம்

அந்த தவறை நான் செய்திருக்க கூடாது.. விஜய்யிடம் வருத்தம் தெரிவித்த சேரன்

விஜய்யை இயக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டது பற்றி இயக்குனர் சேரன் வருத்தத்துடன் பேசி உள்ளார்.

Samayam Tamil 26 Jun 2020, 9:40 am
தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல டாப் இயக்குனர்கள் அவரை இயக்க காத்திருக்கின்றனர். கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு ரசிகர்கள் மட்டும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும் விஜய்யின் பழைய வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருந்தன.
Samayam Tamil Vijay and Cheran


சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தை பற்றி விஜய் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசும் வீடியோ ஒன்றும் வைரலாகி இருந்தது. அந்த வீடியோவில் விஜய் ஆட்டோகிராப் படம் தியேட்டரில் பார்த்த அனுபவம் பற்றி பேசியிருந்தார். தனது வாழ்க்கையிலும் ஆட்டோகிராப் படம் போல பல்வேறு காதல்கள் இருந்ததை படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பிறகு நினைவு கூர்ந்ததாக தெரிவித்திருந்தார். தனக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போது முதன் முறையாக ஒரு ஆட்டோகிராப், அதன்பிறகு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒன்று, அதன் பின் கல்லூரி காலங்களில் ஒன்று என பல்வேறு காதல்களை கடந்துதான் வந்திருப்பதாக விஜய் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த இயக்குனர் சேரன் விஜய் பற்றி உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய்யுடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்தது பற்றி அவர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது..

"ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது.. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று."

"அந்த தவறை நான் செய்திருக்க கூடாது.. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.. இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன்.. ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்."


"அவரிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது.. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை.. வாவ்... கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான்.. அவ்வளவு டெடிகேஷன்... அதுவே இன்று அவரின் உயரம்.." என்று கூறியுள்ளார்.

கடந்த வருடம் இயக்குனர் சேரன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் அவருக்கு நல்ல ஆதரவும் கிடைத்து இருந்தது. தான் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை இயக்கப்போவதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது வரை அந்தப்படம் துவங்கவில்லை. சேரன் அடுத்த சிம்புவுடன் ஒரு கதை கூறி இருப்பதாகவும் செய்திகள் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது ஆனால் அந்த படமும் இன்னும் உறுதியாகவில்லை.

விஜய் சேதுபதி படம் துவங்காமல் இருப்பது பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார். "விஜய் சேதுபதி உடன் படம் பண்ணாலும் அது எனக்கான அடையாளத்துடன் அவருக்கான முக்கியமான படமாக இருக்கும்.. அது நல்ல படமா வரும். விஜய் சேதுபதி.. அவர் மனசு வைக்கணும்.. அதுக்குத்தான் வெயிட்டிங்" என சேரன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்