ஆப்நகரம்

விஷாலை மறைமுகமாக போட்டுத்தாக்கிய இயக்குநர் சேரன்!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுப்பவர்களை முதலில் விவசாயம் செய்ய சொல்லுங்கள் என்று இயக்குநர் சேரன் கருத்து தெரிவித்துள்ளார்.

TOI Contributor 21 Jun 2017, 3:07 pm
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுப்பவர்களை முதலில் விவசாயம் செய்ய சொல்லுங்கள் என்று இயக்குநர் சேரன் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil director cheran slams actor vishal
விஷாலை மறைமுகமாக போட்டுத்தாக்கிய இயக்குநர் சேரன்!


சமீபத்தில் நடிகர் விஷால் தமிழக விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றும் அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது என்று டுவீட் செய்துள்ளார்.

விவசாயிகள் பாவம் என்று அறிக்கை விடுகிறார்கள், கடிதம் எழுதுகிறார்கள். அப்படி செய்பவர்களை முதலில் விவசாயம் செய்ய சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார். நடிகர் விஷால் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில், இயக்குநர் சேரனின் இந்த டுவீட் விஷாலை மறைமுகமாக தாக்குவது போல் அமைந்துள்ளது.

வெகு நாட்களாகவே இயக்குநர் சேரனுக்கும், நடிகர் விஷாலுக்கும் மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேச விஷாலுக்கு என்ன தகுதி உள்ளது என்று சேரன் ஏற்கனவே விஷாலுக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்