ஆப்நகரம்

சொந்த ஊரில் சாதிக்கலவரம்: இயக்குனர் சேரன் பரபரப்பு ட்வீட்!

தனது சொந்த ஊரில் நடைபெற்ற சாதிக்கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து இயக்குனரும், நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 19 Jan 2022, 7:17 am
பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் சேரன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவருக்கும், லாஸ்லியாவுக்குமான தந்தை, மகள் பாசம் பார்வையாளர்கள் அனைவரையும் நெகிழ செய்தது. பிக்பாஸ் விட்டு வெளிய வந்த பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சேரன், தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
Samayam Tamil Cheran
Cheran


இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற சாதி கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பொங்கல் திருநாளை ஒட்டி ஒரு சாதி கலவர பிரச்சனை நடந்திருக்கிறது. மேலும், இந்த கலவரத்தை ஏற்படுத்திய கும்பல் ஆண்கள், பெண்கள் பாரபட்சம் பார்க்காமல் கொடூரமாக தாக்கி இருக்கிறது.

பொங்கல் பண்டிகை அன்று மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பழையூர் பட்டியில் இந்த கலவரம் நடந்துள்ளது. இது இயக்குனர் சேரன் உடைய சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகை அன்று அங்கிருக்கிற ஆதிதிராவிடர்கள் பொங்கல் விழாவை கொண்டாடி இருக்கிறார்கள். இது பிடிக்காத சிலர் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

ப்ரொஃபைல் போட்டோவை மாற்றிய சவுந்தர்யா ரஜினிகாந்த்: திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!
இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, இத்தனை வருடங்களில் இல்லாத நிகழ்வு என் கிராமத்தில் நடந்திருப்பது மனதை புண்படுத்துகிறது. அங்கே எல்லோரும் இதுவரை மனதை பிள்ளையாக எந்த ஒரு ஜாதி வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். சில விஷ கிருமிகள் புகுந்து அந்த ஒற்றுமையை வேர் அறுக்க முயல்வதை தடுக்கவேண்டும்.


அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதும் கட்டிவைத்து அடித்ததும் கண்டனத்திற்குரியது. எங்கள் கிராமப் பெரியவர்கள் மற்றும் காவல்துறையினர் சரியான விசாரணை நடத்தி நீதி காண வேண்டும். நம் மண்ணில் இனி இதுபோல் ஒன்று நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதல்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்