ஆப்நகரம்

என்னது சினிமாவில் இருந்து விடுவிப்பா?: சேரனின் ட்வீட்டால் ஷாக்கான சூர்யா ரசிகர்கள்!

'ஜெய் பீம்' படம் போல் ஒவ்வொரு முன்னணி ஹீரோக்களும் படம் நடிக்க முன்வர வேண்டும் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Nov 2021, 11:51 am
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப்படம் குறித்து நடிகர் சேரன் பகிர்ந்துள்ள ட்விட் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Cheran
Cheran


'ஜெய் பீம்' படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கு இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

'ஜெய் பீம்' படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருந்தனர். அந்த வகையில் இந்தப்படத்தையும், நடிகர் சூர்யாவையும் பாராட்டி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வாழ்த்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

'ஜெய் பீம்' படக்குழுவை பாராட்டிய சரத்குமார்: வறுத்தெடுக்கும் பாமக ஆதரவாளர்கள்!
இந்நிலையில் இந்த வாழ்த்து கடிதத்தை ரிட்வீட் செய்து இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், எப்படியோ... ஒரு நடிகரை இந்த சினிமா கமர்சியல் சினிமாவிலிருந்து விடுவித்து மக்களுக்கான சினிமாவை எடுக்க ஊக்குவித்திருக்கிறது.. மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் இதுபோல சமூகத்திற்கான படங்கள் செய்தால் சென்றடையும் வீச்சை.. வித்தியாசத்தை சூர்யா போல அனைவரும் உணர்ந்தால்.. நல்லது.


ஜெய்பீம் படம் பார்த்து தங்கள் ஹீரோக்களும் இதுபோன்ற சமூகத்திற்கான உண்மையான பிரச்னைகளை மையமாக வைத்து சோடனை இல்லாத சினிமாக்களை எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் அன்பு ரசிகர்கள் அவரவர் ஆதர்ச நாயகர்களுக்கு சொல்லுங்கள்.. வருடம் ஒரு படமாவது முயலுங்கள் என்று.. நன்றி. என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்