ஆப்நகரம்

முதல் பழங்குடித் தலைவன் பிர்சா முண்டா வாழ்க்கையை படமாக்கும் பிரபல இயக்குநர்!

இயக்குநர் கோபி நயினார் தனது அடுத்த படைப்பாக பிர்சா முண்டா திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

Samayam Tamil 10 Oct 2018, 3:00 pm
அறம் படம் மூலம் பரவலாக அறியப்பட்ட இயக்குநர் கோபி நயினார் தனது அடுத்த படைப்பாக பிர்சா முண்டா திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
Samayam Tamil முதல் பழங்குடித் தலைவன் பிர்சா முண்டா வாழ்க்கையை படமாக்கும் பிரபல இயக்குநர்!
முதல் பழங்குடித் தலைவன் பிர்சா முண்டா வாழ்க்கையை படமாக்கும் பிரபல இயக்குநர்!


யார் இந்த பிர்சா முண்டா?

ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமை தாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களை மீட்பதற்குப் போராடிய வீரன் பிர்சா முண்டா. சிறு வயதிலேயே பழங்குடிகளுக்குத் தலைமை வகித்துப் போராடிய அவர், மண்ணின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஜமீன்தார்கள், கடன் கொடுப்பவர்களிடம் இருந்து பழங்குடிகள் விடுதலை பெற்று, 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற கருத்தை முன்வைத்துப் போராடிய முதல் பழங்குடித் தலைவன் பிர்சாதான்.

ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போராட பழங்குடிகளைத் திரட்டிக் கெரில்லா வீரர்கள் கொண்ட படையையும் பிர்சா முண்டா வைத்திருந்தார். 1900-ல் ஆங்கிலேயப் படையால் கைது செய்யப்பட்ட அவர், அதே ஆண்டு சிறையில் தனது 25-வது வயதில் காலமானார்.

இவரது வாழ்க்கையைத் தான், பிர்சா முண்டா என்ற பெயரில் இயக்குநர் கோயி நயினார் படமாக எடுக்க உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2 ஆண்டுகள் பல்வேறு ஆவணங்களை திரட்டி பிர்சா முண்டா திரைக்கதையை உருவாக்கி உள்ளேன். பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ள இந்த படத்தில், முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம். ஜெய் படத்தை முடித்ததும் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும்” என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்