ஆப்நகரம்

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்க சென்ற இயக்குனர் கவுதமன் கைது

விவசாயிகளுக்காக ஆதரவாக போராட்டம் நடத்த முயற்சி செய்ததால் இயக்குனர் கவுதமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 2 Apr 2017, 10:53 am
விவசாயிகளுக்காக ஆதரவாக போராட்டம் நடத்த முயற்சி செய்ததால் இயக்குனர் கவுதமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil director gowthaman arrested in valluvarkottam
விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்க சென்ற இயக்குனர் கவுதமன் கைது


டில்லியில் தங்களது கோர்க்கைகளை நிறைவேற்ற வேண்டி விவசாயிகள் தொடர்ந்து 20வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் மாணவர்களையும், இளைஞர்களையும் அழைத்து வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்துவேன் என இயக்குனர் கவுதமன் கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்திருந்தார்.

சொன்னபடி போராட்டம் நடத்துவதற்காக மாணவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு இயக்குனர் கவுதமன், வள்ளுவர்கோட்டத்திற்கு வந்தார். அப்போது போராட்டம் நடத்த முயன்றதால் கவுதமனை போலீசார் கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த 8 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Director gowthaman arrested in valluvarkottam.

அடுத்த செய்தி

டிரெண்டிங்