தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் வினோத். நேர்கொண்டப்பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது துணிவு படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
நேர்கொண்டப்பார்வை திரைப்படம் வெற்றிப்படமாக அமைய அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் தோல்வியை சந்தித்தது. எனவே தற்போது துணிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வலிமையின் தோல்வியை ஈடுசெய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதையடுத்து பொங்கலுக்கு இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் பல விஷயங்களை பகிர்ந்த இயக்குனர் வினோத் நடிகர் அஜித்தின் தன்மை குறித்தும் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, படத்தில் அஜித்தை மிகை படுத்தி பேசினால் அவருக்கு அது சுத்தமாக பிடிக்காது. படத்தின் தலைப்பில் கூட வீரன் என்பதற்கு பதிலாக வீரம் என வைக்க சொன்னவர் தான் அஜித்.
பாடல்களிலோ, வசனங்களிலோ அவரை மிகை படுத்து பேசுவதாக இருந்தால் அதை வேண்டாம் என்பார் அஜித்.
இருப்பினும் கதையின் தேவைக்காக சில விஷயங்களை வைத்துதான் ஆகவேண்டும் என கூறினால் மட்டுமே சம்மதிப்பார் என இயக்குனர் வினோத் கூறியுள்ளார்.
நேர்கொண்டப்பார்வை திரைப்படம் வெற்றிப்படமாக அமைய அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் தோல்வியை சந்தித்தது. எனவே தற்போது துணிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வலிமையின் தோல்வியை ஈடுசெய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதையடுத்து பொங்கலுக்கு இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் பல விஷயங்களை பகிர்ந்த இயக்குனர் வினோத் நடிகர் அஜித்தின் தன்மை குறித்தும் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, படத்தில் அஜித்தை மிகை படுத்தி பேசினால் அவருக்கு அது சுத்தமாக பிடிக்காது. படத்தின் தலைப்பில் கூட வீரன் என்பதற்கு பதிலாக வீரம் என வைக்க சொன்னவர் தான் அஜித்.
பாடல்களிலோ, வசனங்களிலோ அவரை மிகை படுத்து பேசுவதாக இருந்தால் அதை வேண்டாம் என்பார் அஜித்.
இருப்பினும் கதையின் தேவைக்காக சில விஷயங்களை வைத்துதான் ஆகவேண்டும் என கூறினால் மட்டுமே சம்மதிப்பார் என இயக்குனர் வினோத் கூறியுள்ளார்.