ஆப்நகரம்

தூத்துக்குடிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய இயக்குனர் ஹரி!

நடிகர் விஜய்யை தொடர்ந்து இயக்குனர் ஹரியும் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

Samayam Tamil 10 Jun 2018, 2:08 pm
நடிகர் விஜய்யை தொடர்ந்து இயக்குனர் ஹரியும் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
Samayam Tamil Director Hari
தூத்துக்குடியில் இயக்குநர் ஹரி


பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே 22ம் தேதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் வெடித்ததை அடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களையும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களையும் தலைவர்களும், நடிகர்களும் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு நடிகர் விஜய் நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அது மட்டுமல்லாமல் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் ஹரியும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Director Hari meets Tuticorin people who's affected in Sterlite Firing.

அடுத்த செய்தி

டிரெண்டிங்