ஆப்நகரம்

சிங்கம் பட இயக்குனருக்கு கொலை மிரட்டல்

இயக்குனர் ஹரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, போலீஸ் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 23 Aug 2016, 6:04 pm
சூர்யாவின் சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களைத் தொடர்ந்து சிங்கம் -3 (எஸ்-3) படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், வீட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஹரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil director hari receives bomb threat
சிங்கம் பட இயக்குனருக்கு கொலை மிரட்டல்


இந்த கொலை மிரட்டல் காரணமாக சென்னை ஆர்5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து ஹரியின் உறவினர் ஒருவர் கூறுகையில், வீட்டு குடியிருப்பு பகுதியில் கார் நிறுத்துவது தொடர்பாக அவருக்கு வேண்டிய உறவினர் கார்த்திக் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஹரியின் வீட்டில் குண்டு வீசுவோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 2 மணிக்கு நடந்துள்ளது. இதேபோல் 7 மணிக்கும் நடந்துள்ளது. இதில் பதற்றமடைந்த ஹரி, ஆர்5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் மீது பிரிவு 75ன் கீழ் இடையூறு மற்றும் தொல்லை கொடுத்தல் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்