ஆப்நகரம்

வறுமையில் வாடும் டேய் சண்முகமணி புகழ் நந்தகோபால்: உதவிய சௌந்தரராஜா

நடிகர் கே பாக்யராஜ் நடித்த சுந்தரகாண்டம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் நந்தகோபாலுக்கு தர்மதுரை புகழ் சௌந்தரராஜா உதவி செய்துள்ளார்.

Samayam Tamil 2 Jul 2019, 8:25 pm
இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் மிகவும் முக்கியமான படம் சுந்தரகாண்டம். இப்படத்தில் டேய் சண்முகமணி என்று டயலாக் பேசி நடித்தவர் நந்தகோபால். படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் நமசிவாயம். படத்தில் பள்ளிக்கூட காட்சியில் வரும் நந்தகோபால் தற்போது வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil nandha


இந்த நிலையில், இவரை நேரில் சந்தித்த சுந்தரபாண்டியன், தர்ம துரை ஆகிய படங்களின் புகழ் சௌந்தர ராஜா உதவி செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரு காலத்தில் பல படங்களில் நடித்த நடிகர்களின் நிலைமை இன்று பரிதாபத்தில் தான் இருக்கிறது. சினிமாவையே கதி என்று நம்பியிருந்த அவர்களது வாழ்க்கை தற்போது வாழ்வாதாரத்திற்கு கூட வழியில்லாமல் இருக்கிறது. அப்படியிருக்கும் அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு அன்பையும், ஆதரவையும் கொடுப்போம். அவர்களது வறுமையை போக்குவோம் என்று கூறியுள்ளார்.

மேலும், பிளாக் பாண்டியின் மூலம் நடிகர் நந்தகோபால் நிலைமையை அறிந்து கொண்டேன். அதன் பிறகு அவருடன் சென்று பழங்கள் மற்றும் பணம் கொடுக்கும் போது, அவரது கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அப்போது, அவர் என்ன சொன்னார் தெரியுமா? நான் சீக்கிரமாக குணமடைந்து வந்து சாதிக்க வேண்டும் என்று கூறியதாக சௌந்தரராஜா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்