ஆப்நகரம்

அடுத்ததாக இயக்குனர் கண்ணனுடன் இணையும் நடிகர் சந்தானம்!

நடிகர் சந்தானம், ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை அடுத்து தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 2 May 2019, 3:34 pm
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர். ஆனால், தற்போது அவர் ஹீரோவாக அவதாரம் எடுத்துவிட்டார். நடிகர் சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
Samayam Tamil santhanam


இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அடுத்ததாக அவர் நடித்து, ரிலீஸுக்காக காத்திருக்கும் படங்கள் ‘சர்வர் சுந்தரம்’, ‘மத கஜ ராஜா’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகியவை. நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் ‘தில்லுக்கு துட்டு-23 மிகப்பெரிய வெற்றியை அடைந் தது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சந்தானம், ‘கண்டேன் காதலை’, ‘பூமராங்’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்