ஆப்நகரம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தின் தலைப்பு ‘கர்ணன்’ அல்லது ‘ஜெயசிம்ஹா’!?

கே.எஸ். ரவிக்குமார், நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கும் படத்தின் தலைப்புகள் ‘கர்ணன்’ அல்லது ‘ஜெயசிம்ஹா’ இவற்றில் ஒன்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

TNN 16 Oct 2017, 3:51 pm
கே.எஸ். ரவிக்குமார், நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கும் படத்தின் தலைப்புகள் ‘கர்ணன்’ அல்லது ‘ஜெயசிம்ஹா’ இவற்றில் ஒன்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil director ks ravikumar next movie will be karnan or jayasimha
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தின் தலைப்பு ‘கர்ணன்’ அல்லது ‘ஜெயசிம்ஹா’!?


இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை வைத்து ‘லிங்கா’ படத்தை இயக்கினார். அதையடுத்து கன்னட நடிகர் சுதீப்பை கதாநாயகனாக வைத்து ‘முடிஞ்சா இவனை புடி’ என்ற படத்தை தமிழ், கன்னடத்தில் இயக்கினார். அதையடுத்து கே.எஸ்.ரவிக்கும் ‘தங்கமகன்’, ‘றெக்க’, ‘ரெமோ’ உட்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார்.

தற்போது கே.எஸ்.ரவிக்குமார், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்திற்காக ‘கர்ணன்’, ‘ஜெயசிம்ஹா’ ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒன்றை வைப்பதற்கு பரிசீலித்து வருகிறார்கள். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கும் நிலையில், அவரைத் தொடர்ந்து இன்னொரு மலையாள நடிகை நடாஷா கமிட்டானார். தற்போது மூன்றாவதாக தெலுங்கு நடிகை ஹரிப்பிரியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்