ஆப்நகரம்

கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கிய லிங்குசாமி!

வெள்ள நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கிய இயக்குநர் லிங்குசாமி உதவி செய்துள்ளார்.

Samayam Tamil 24 Aug 2018, 5:41 pm
சென்னை: வெள்ள நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கிய இயக்குநர் லிங்குசாமி உதவி செய்துள்ளார்.
Samayam Tamil Lingusamy


கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி, ஏராளமான நீர் திறந்து விடப்பட்டது. பெருவெள்ளமாக மாறிய மழை நீர், குடியிருப்புகளை கடுமையாக சேதப்படுத்தியது.

பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து, ஆதரவற்றவர்களாக மாறினர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

பல்வேறு மாநில அரசுகளும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் நன்கொடை வழங்கினர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கும் இயக்குநர் லிங்குசாமி தனது பங்காக ரூ.2 லட்சத்தை கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அளித்துள்ளார்.

இதேபோல் ஏராளமான தமிழ்த் திரையுலகினரும் கேரளாவிற்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

Director Lingusamy support with his contribution of 2 Lac to Kerala Relief Fund.

அடுத்த செய்தி

டிரெண்டிங்