வெற்றி இயக்குனர்
தமிழ் சினிமாவில் தற்போதைய நிலைக்கு லோகேஷ் தான் டாப் இயக்குனராக வலம் வருகின்றார். இதுவரை அவர் இயக்கிய நான்கு படங்களும் மெகாஹிட் படங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷின் மார்க்கெட் மளமளவென உயர்ந்தது. இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ என்ற மிகப்பிரமாண்டமான படத்தை இயக்கி வருகின்றார்
லியோ
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் இணையும் லியோ படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் தான். ஏனென்றால் விக்ரம் படத்தை போல லியோ திரைப்படமும் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாக இருக்கின்றதாம். இதன் காரணமாகவே இப்படத்திற்கு உச்சகட்ட எடிதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. மேலும் இப்படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலி கான் , சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது
லோகேஷின் திறன்
லியோ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து முடிந்தது. கடும் குளிரிலும் ஒரு நாள் கூட வீணடிக்காமல் படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் லோகேஷ். சமீபத்தில் இப்படத்தின் காஷ்மீர் பகுதி நிறைவடைந்ததை அடுத்து படக்குழு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் படக்குழு காஷ்மீரில் சந்தித்த சவால்கள் பற்றி கூறியிருந்தனர். இது ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட 500 கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் குளிரில் கஷ்டப்பட்டு ஒத்துழைத்துள்ளனர் என்பதை பார்த்து ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த திரையுலகினரும் லியோ படக்குழுவை பாராட்டி வந்தனர்
சம்பளம்
இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கு லோகேஷ் பெருமளவில் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதையடுத்து லியோ திரைப்படம் வெற்றிபெறும் பட்சத்தில் லோகேஷின் சம்பளம் மேலும் அதிகரிக்கவே கூடும். இந்நிலையில் லியோ படத்தை அடுத்து லோகேஷ் கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என பேசப்பட்டு வந்தது. ஆனால் இடையில் ரஜினியின் 171 ஆவது திரைப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார் என செய்திகள் வலம் வரத்துவங்கியுள்ளன. எனவே லோகேஷ் லியோ படத்திற்கு பிறகு ரஜினியின் படத்தை தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவும் இருக்கின்றது. இந்நிலையில் இப்படத்திற்காக லோகேஷ் மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்க இருக்கிறாராம். கிட்டத்தட்ட 40 கோடிக்கு மேல் லோகேஷிற்கு சம்பளம் வழங்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் கிடுகிசுக்கப்பட்டு வருகின்றது