ஆப்நகரம்

ரஜினி ரசிகர்களுக்காக... இயக்குநர் மகேந்திரனின் மகன் வெளியிட்ட புகைப்படம்!

ரஜினி நடித்திருந்த முள்ளும் மலரும் படத்தில் இயக்குநர் மகேந்திரன் கைப்பட எழுதிய வசனம் தற்போது வைரலாகியுள்ளது

Samayam Tamil 24 Mar 2020, 3:47 pm
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் இன்றும் பெரிய அளவில் பாராட்டப்படும் படமாக அமைந்தது மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும். இதில் மிகவும் வித்தியாசமான ரஜினியை அவர் திரையில் காண்பித்திருந்தார். மகேந்திரன் கடந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி மரணமடைந்தார். மகேந்திரன் கைப்பட எழுதிய ஒரு வசனத்தை அவரது மகன் ஜான், ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது,
Samayam Tamil mullum malarum


தலைவரின் ரசிகர்களுக்காக, அப்பாவின் கைப்பட எழுதிய வசனம் என அவர் குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.



முள்ளும் மலரும் படத்தில் வரும் மிக தனித்துவமான வசனங்களுள் ஒன்றுதான் இது.

ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட , இந்த காளி பொழச்சுக்குவான் சார்...

கெட்ட பய சார் அவன்..

இந்த ட்வீட்டுக்கு கீழ் ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தமிழ் சினிமாவின் திருப்பு முனையாக முள்ளும் மலரும் படத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் செய்துள்ள கமெண்ட்டில்,



சூப்பர்ஸ்டார் ஆவதற்கு முன்பாகவே வந்த சிறப்பான பன்ச் டைலாக். முள்ளும் மலரும் (16 வயதினிலேவை விட) தமிழ் சினிமாவின் திருப்புமுனையாக அமைந்த படம்.


அந்த படத்தில் ரஜினி மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். அவரின் முக பாவனைகளை காட்டி, இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.


இந்த வசனம் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட காட்சியை இங்கு காண்போம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்