ஆப்நகரம்

பிரகாஷ் ராஜ் மீது கோபப்பட்ட மோகன்ராஜா!

சொன்ன தேதியில் படப்பிடிப்பிற்கு வராத பிரகாஷ் ராஜ் மீது, இயக்குனர் மோகன்ராஜா கோபப்பட்டார்.

TNN 17 Feb 2017, 8:00 pm
சொன்ன தேதியில் படப்பிடிப்பிற்கு வராத பிரகாஷ் ராஜ் மீது, இயக்குனர் மோகன்ராஜா கோபப்பட்டார்.
Samayam Tamil director mohan raja angry on prakash raj
பிரகாஷ் ராஜ் மீது கோபப்பட்ட மோகன்ராஜா!


நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி. ராஜா. இவர் ‘24 ஏஎம் ஸ்டியோஸ்’ பட நிறுவனம் தொடங்கி ‘ரெமோ’ படத்தைத் முதலில் தயாரித்தார். அதனால் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். தமிழில் வெற்றி பெற்ற ‘ரெமோ’ படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார். படம் தோல்வியடைந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குனர் மோகன்ராஜா ஒரு புதிய படத்தை தொடங்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பரில் துவங்கி தற்போதுவரை நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னையில் உள்ள பிரசாத் லேப் வளாகத்தில் வில்லேஜ் செட் போட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் காம்பினேஷனில் படப்பிடிப்பு நடைபெற்றது. தெலுங்கு படத்திற்காக ஆந்திரா சென்ற பிரகாஷ்ராஜ் சொன்ன தேதியில் படப்பிடிப்புக்கு வராததால் மோகன்ராஜா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது. அதனால் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கோபப்பட்டார்.

தற்போது பிரகாஷ்ராஜ் வராததைபற்றி கவலைப்படாமல் , தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிவருகிறார் இயக்குனர் மோகன்ராஜா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்