ஆப்நகரம்

ஒரு மதத்திற்கு எதிரான பிரச்சாரமாக மாற்றுகிறார்கள்: கொரோனா பற்றி இயக்குனர் பி.எஸ்.மித்ரன்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதை ஒரு குறிப்பிட மதத்தினர் பரப்பியதாக செய்தி பரப்புகிறார்கள் என இயக்குனர் பி.எஸ்.மித்ரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 1 Apr 2020, 2:59 pm
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1637-ஆக உயர்ந்துள்ளது. அதில் 133 பேர் தற்போது வரை குணமடைந்துவிட்டனர். 38 பேர் மரணமடைந்துள்ளனர்.
Samayam Tamil P.S.Mithran


டெல்லியில் உள்ள நிசாமுதீன் மர்காஸ் மசூதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அதில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டறியும் முயற்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட பலவேறு மாநில அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதுவரை தமிழ்நாட்டில் இருந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலரை கண்டுபிடிக்க முடியாமல் அரசு அதிகாரிகள் திணறி வரும் நிலையில், அதில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பிரச்சாரமாக டிவி சேனல் ஒன்று மாற்றி வருவதாக இயக்குனர் பிஎஸ் மித்ரன் கூறியுள்ளார்.

"#COVID19 நேரத்தில் Sanitizer-ஐ அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை பார்தெல்லாம் கோவப்பட்டோமே!
இன்று காலை ஒரு news channel இதே #COVID19-ஐ ஒரு மதத்திற்கு எதிரான பிரச்சாரமா மாத்திகிட்டு இருக்கான், இவனுங்கலாம் என்ன design-நு புரியல!!" என அவர் ட்விட்செய்துள்ளார்.


விஷாலின் இரும்பு திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கியவர் அவர். அடுத்து அவர் நடிகர் கார்த்தி உடன் ஒரு படத்தில் கூட்டணி சேர்கிறார் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்