ஆப்நகரம்

சோபியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பா.ரஞ்சித்!

போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 4 Sep 2018, 7:41 pm
போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil Sphiya


தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக அவர் வந்தார். அதே விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண்ணும் பயணித்தார். அப்போது சோபியா ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என்று பாஜக-வை விமர்சித்து கோஷமிட்டுள்ளார்.

இதனையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து சோபியா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் சோபியா கைது செய்யப்பட்டார். சோபியா கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘ஜனநாயகத்தின் குரல் சோபியா. தமிழக அரசே அவரை விடுதலை செய்’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்