ஆப்நகரம்

பா. ரஞ்சித்துக்கு மகன் பொறந்தாச்சு: செம பெயர் வச்சிருக்கார்

முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இரண்டாவது முறையாக அப்பாவாகியுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Samayam Tamil 19 Mar 2020, 1:31 pm
அட்டக்கத்தி படம் மூலமாக சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் பா.ரஞ்சித். அதன்பிறகு கார்த்தி நடிப்பில் மெட்ராஸ் படத்தினை இயக்கினார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே ரஜினி இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். கபாலி, காலா என தொடர்ந்து அவரது இயக்கத்தில் ரஜினி நடித்தார்.
Samayam Tamil Director Pa.Ranjith


படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் களமிறங்கிய பா.ரஞ்சித் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது ஆர்யா நடிப்பில் சல்பேட்டா என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதில் வட சென்னை பாக்ஸராக ஆர்யா நடிக்கிறார். மெட்ராஸ் புகழ் கலையரசனும் இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் பா.ரஞ்சித் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அவருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பா.ரஞ்சித் மற்றும் அவரது மனைவி அனிதாவுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. அவருக்கு மகிழினி என பெயர் வைத்துள்ளனர். தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கின்றது குடும்பம். குழந்தைக்கு மிளிரன் என பெயர் சூட்டியுள்ளார் பா.ரஞ்சித். மிளிரன் என்றால் ஜொலிப்பவன் என்று அர்த்தம்.

பா.ரஞ்சித் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்