ஆப்நகரம்

வரும் 19ம் தேதி வரை இயக்குனர் ரஞ்சித்தை கைது செய்யமாட்டோம்: திருப்பனந்தாள் போலீஸ்!

வரும் 19ம் தேதி வரை இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்யமாட்டோம் என்று திருப்பனந்தாள் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 13 Jun 2019, 5:27 pm
வரும் 19ம் தேதி வரை இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்யமாட்டோம் என்று திருப்பனந்தாள் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil pa ra


தஞ்சாவூரில் சோழ மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் மீது இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஞ்சித் மீது கலகம் உண்டாக்குதல், ஜாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புகாரைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

சாதிக்கு எதிரான உங்களது முயற்சிக்கு எங்களது ஆதரவு: காங்கிரஸ் தலித் பிரிவு ஆதரவு!

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. விசாரணைக்குப் பின் திருப்பனந்தாள் போலீசார் வரும் 19ம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், ரஞ்சித்தின் முன் ஜாமீனுக்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் தலித் காங்கிரஸ் பிரிவு ரஞ்சித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்