ஆப்நகரம்

'எதற்கும் துணிந்தவன்' 51 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு: படக்குழுவினருக்கு பாண்டிராஜ் நன்றி!

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் 51 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளதாக இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Sep 2021, 12:43 pm
சூரரை போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் துவங்கியது. இந்நிலையில் 51 நாட்கள் நீண்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Etharkkum Thunindhavan
Etharkkum Thunindhavan


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகுமா என ஆர்வமுடன் காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் மேலும் சில போஸ்டர்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

'பிசாசு 2' படப்பிடிப்பை நிறைவு செய்த மிஷ்கின்: விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்நிலையில் 51 நாட்கள் வெயில், மழை பொருட்படுத்தாமல், கடுமையான உழைப்பை கொடுத்து நீண்ட நாள் படப்பிடிப்பை நிறைவு செய்ய காரணமாக அமைந்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். மேலும், நம்பமுடியாத உழைப்பை அனைவரும் கொட்டி கொடுத்தார்கள் என்றும், குறிப்பாக சூர்யா, சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பாண்டியன் உட்பட அனைவருக்கும் எனது நன்றி என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் பாண்டிராஜ்.


பாண்டிராஜ் படத்தை முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. வாடிவாசல் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்