ஆப்நகரம்

தமிழகத்தை கோபப்படுத்திய ரஜினியின் பேச்சு; படமாக்கும் இயக்குநர் பார்த்திபன்!

ரஜினியின் சர்ச்சைக்குரிய பேச்சை, இயக்குநர் பார்த்திபன் படமாக எடுக்கவுள்ளார்.

Samayam Tamil 8 Jun 2018, 5:49 pm
சென்னை: ரஜினியின் சர்ச்சைக்குரிய பேச்சை, இயக்குநர் பார்த்திபன் படமாக எடுக்கவுள்ளார்.
Samayam Tamil Rajinikanth and Parthiban


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அவர்களின் 100வது நாள் தொடர் போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

அப்போது பேசிய அவர், நன்றாக சென்று கொண்டிருந்த போராட்டம் சமூக விரோதிகள் உள்நுழைந்ததால் தான் திசைமாறியது. வன்முறைக் காட்சிகளாக மாறியது என்று பேசினார்.

ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு, தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினியின் ‘சமூக விரோதிகள்’ என்ற பேச்சை, தனது புதிய படத்திற்கு பெயராக இயக்குநர் பார்த்திபன் சூட்டியுள்ளார்.

இப்படத்தின் நடிகர்கள் குறித்து, விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது ‘துருவ நட்சத்திரம்’, ’திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கடைசியாக, கடந்த 2016ஆம் ஆண்டு, ’கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தை இயக்கினார்.

Director Parthiban's next movie titled after Rajni's controversial statement.

அடுத்த செய்தி

டிரெண்டிங்