ஆப்நகரம்

விஜய்யை பாராட்டிய எஸ்.எஸ்.ராஜமௌலி!

‘கீதா கோவிந்தம்’ படத்தைப் பார்த்துவிட்டு பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, விஜய் தேவரகொண்டாவைப் பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 18 Aug 2018, 4:18 pm
‘கீதா கோவிந்தம்’ படத்தைப் பார்த்துவிட்டு பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, விஜய் தேவரகொண்டாவைப் பாராட்டியுள்ளார்.
Samayam Tamil geetha-govindam


நடிகர் விஜய் தேவரகொண்டா ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படம் மூலம் ஹீரோவாக தெலுங்கில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது விஜய், ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பரசுராம் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், ராஷ்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். நித்யா மேனன், அனு இம்மானுவேல் இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இந்தப் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலியும் படத்தைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி தன் டுவிட்டர் பக்கத்தில், “கீதா கோவிந்தம் படம், நகைச்சுவையாக இருந்தது. ‘அர்ஜுன் ரெட்டி’க்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத, ஆனால் சரியான தேர்வை செய்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
படம் முழுவதும் சின்னச் சின்ன நுட்பங்களும், வேடிக்கையான தருணங்களும் நிறைந்துள்ளன. பரசுராம் சிறப்பாகப் படத்தை இயக்கியுள்ளார்” என தெரிவித்துள்ளார் எஸ்.எஸ்.ராஜமௌலி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்