ஆப்நகரம்

அடுத்த படத்திற்கு பூஜை போட்ட இயக்குனர் ராஜமௌலி!

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தனது அடுத்த படத்திற்கான பூஜையை போட்டுள்ளார்.

Samayam Tamil 13 Nov 2018, 4:01 pm
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தனது அடுத்த படத்திற்கான பூஜையை போட்டுள்ளார்.
Samayam Tamil RR


‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தை தந்தவர் இயக்குனர் ராஜமௌலி. இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி 2500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ‘பாகுபலி-2’ படம் வெளியாகி சுமார் ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் தனது புதிய படத்தை துவங்காமல் அமைதியாக இருந்து வந்தார் ராஜமௌலி. அதேசமயம் ராம்சரண்-,ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து படம் இயக்கவுள்ளதாக தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதமே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொண்டார் இயக்குனர் ராஜமௌலி.

ஒருவழியாக தனது புதிய படத்திற்கான பூஜையை மிகப் பிரமாண்டமாக இன்று போட்டார். இந்த பூஜை நிகழ்வில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் மெகாஸ்டார் சிரஞ்சீவி, ராணா டகுபதி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


இயக்குனர் ராஜமௌலி இதுவரை இயக்கியுள்ள படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இந்தப்படம் இருக்கும் என்கிறார்கள் தெலுங்கு திரையுலகினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்