ஆப்நகரம்

துல்கருக்கு ரசிகரான இயக்குனர் ராஜமௌலி!

துல்கர் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்தைப் பார்த்து, இயக்குனர் ராஜமௌலி நான் துல்கரின் ரசிகனாகி விட்டேன் என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 11 May 2018, 4:26 pm
துல்கர் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்தைப் பார்த்து, இயக்குனர் ராஜமௌலி நான் துல்கரின் ரசிகனாகி விட்டேன் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil mahanathi-raja


நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் துல்கர் சல்மான் உட்பட பலர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘மகாநடி’. இந்தப் படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் தெலுங்கில் உருவான ‘மகாநடி’ படம் நேற்றே வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் ராஜமௌலி கூறுகையில், “இதுவரை நான் பார்த்ததிலேயே, சாவித்ரி அம்மாவை அப்படியே பிரதிபலித்தது போல் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அவர் மிகப்பெரிய நடிகையை நம் வாழ்க்கைக்குத் திரும்ப அழைத்து வந்துள்ளார். மேலும் துல்கர் சல்மான் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்திலிருந்து நான் அவருடைய ரசிகனாகி விட்டேன். இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் ஸ்வப்னாவுக்கு என்னுடைய வாழ்த்துகள்’’ என்று வாழ்த்தியுள்ளார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்