சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்தனர் படக்குழுவினர். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு வில்லன்களாக மூன்று பேர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லன்களாக நடித்து வருவகின்றனர்.
'பீஸ்ட்' படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 66-வது படம் உருவாக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு மகள் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில் 'தளபதி 66' படத்தில் இயக்குனர் ராஜு முருகன் வசன எழுத்தாளராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான 'ஜெய் பீம்' படத்தில் 'தல கோதும் பூங்காத்து' என்ற பாடலையும் பாடியிருந்தார். பொதுவாகவே இவரின் படங்களில் அரசியல் வசனங்கள் தீயாக இருக்கும்.
இவர் இயக்கத்தில் வெளியான 'ஜிப்ஸி' படத்திற்கும் சென்சாரில் பல கட் விழுந்தது. எனவே 'தளபதி 66' இவர் டைலாக் எழுதினால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கொரோனா பரவலின் வேகம் பொறுத்து 'தளபதி 66' படத்தை இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிடபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு வில்லன்களாக மூன்று பேர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லன்களாக நடித்து வருவகின்றனர்.
'பீஸ்ட்' படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 66-வது படம் உருவாக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு மகள் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில் 'தளபதி 66' படத்தில் இயக்குனர் ராஜு முருகன் வசன எழுத்தாளராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான 'ஜெய் பீம்' படத்தில் 'தல கோதும் பூங்காத்து' என்ற பாடலையும் பாடியிருந்தார். பொதுவாகவே இவரின் படங்களில் அரசியல் வசனங்கள் தீயாக இருக்கும்.
இவர் இயக்கத்தில் வெளியான 'ஜிப்ஸி' படத்திற்கும் சென்சாரில் பல கட் விழுந்தது. எனவே 'தளபதி 66' இவர் டைலாக் எழுதினால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கொரோனா பரவலின் வேகம் பொறுத்து 'தளபதி 66' படத்தை இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிடபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.