ஆப்நகரம்

சந்திரபாபு நாயுடுவை வில்லனாக்கிய ராம் கோபால் வர்மா; தொண்டர்கள் கொதிப்பு

திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா விஜயவாடா நகருக்குள் நுழைய அரசு கெடுபிடி விதித்திருப்பதால், அவருக்கு அறை தர நட்சத்திர ஓட்டல் மறுத்துவிட்டது. லட்சுமி என்டிஆர் என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள ராம்கோபால் வர்மா அந்தப் படத்தில் சந்திரபாபு நாயுடுவை வில்லன் போல் சித்தரித்துள்ளதால் தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.

Samayam Tamil 29 Apr 2019, 8:42 am
திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா விஜயவாடா நகருக்குள் நுழைய அரசு கெடுபிடி விதித்திருப்பதால், அவருக்கு அறை தர நட்சத்திர ஓட்டல் மறுத்துவிட்டது.
Samayam Tamil ram-gopal-varma-062017


லட்சுமி என்டிஆர் என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள ராம்கோபால் வர்மா அந்தப் படத்தில் சந்திரபாபு நாயுடுவை வில்லன் போல் சித்தரித்துள்ளதால் தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.

இப்படம் மே 1ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ராம்கோபால் வர்மாவை ஆந்திராவுக்குள் வரவிடாமல் தடுக்க தெலுங்குதேசம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மறைந்த ஆந்திர முதல்வர் என்டிஆர் குறித்த இப்படத்தில் சந்தபாபு நாயுடு சில தில்லுமுல்லுகள் செய்து தெலுங்குதேசம் கட்சியை தன் வசப்படுத்தியதாக இப்படத்தில் காட்சிகள் உள்ளன. இதனால் தெலுங்கு தேச கட்சி ஆதரவாளர்கள் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மே ஒன்றாம் தேதியன்று, ஹைதராபாதில் உள்ள என்டிஆர் சதுக்கத்தில் செய்தியாளர்களை சந்திக்கப்போவதாக ராம்கோபால் வர்மா அறிவித்திருந்தார். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொது இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று தெலுங்கானா போலீசார் தடை விதித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்