ஆப்நகரம்

தயாரிப்பாளராகிறார் இயக்குனர் ரஞ்சித்!

‘கபாலி’ படத்தை இயக்கிய ரஞ்சித் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்.

TOI Contributor 2 Jan 2017, 4:38 pm
‘கபாலி’ படத்தை இயக்கிய ரஞ்சித் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்.
Samayam Tamil director ranjith turned as producer
தயாரிப்பாளராகிறார் இயக்குனர் ரஞ்சித்!


தமிழில் ‘அட்டகத்தி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அடுத்த படமான ‘மெட்ராஸ்’ படம் மூலம் எல்லோராலும் பேசப்பட்டார். ரஜினியை வைத்து மூன்றாவதாக ‘கபாலி’ என்ற படத்தை இயக்கி உலகம் முழுவதும் பேசப்பட்டவர் பா.ரஞ்சித். இதனால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

பா.ரஞ்சித் தற்போது ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு ‘நீலம் புரொடக்ஷன்‘ என பெயரிட்டுள்ளார். முதல் படமாக இந்நிறுவனம் ‘பரியேறும் பெருமாள்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் பணியாற்றிய உதவியாளர்.

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நடிக்கிறார். இவருக்க ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராமு ஒளிப்பதிவு செய்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்