ஆப்நகரம்

மீண்டும் அடல்ட் காமெடி: இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2 உறுதி!

கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2 ஆம் பாகம் உருவாக இருக்கிறது.

Samayam Tamil 20 Oct 2019, 2:40 pm
ஹர ஹர மஹாதேவகி என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அடல்ட் காமெட் ஹாரர் படத்தை கொடுத்தார். இப்படத்தில், கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், விஜே ஷா ரா, வைபவி சாந்தில்யா, சந்திரிகா ரவி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்களிடையே ஓரளவு விமர்சனம் பெற்றது.
Samayam Tamil IAMK


இந்த நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது, அது, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2 ஆம் பாகம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நடிகர், நடிகைகள் நடிக்கவில்லையாம். மாறாக புதிதாக நடிகர், நடிகைகளை தேர்வு செய்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிக்க வைக்க இருக்கிறார் இயக்குநர்.

வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்