ஆப்நகரம்

என் முன்னால்தான் அஜீத் தன் காதலை ஷாலினியிடம் கூறினார்: பிரபல இயக்குனர்!

நடிகர் அஜீத், என் முன்னால்தான், நடிகை ஷாலினியிடம் காதலை கூறினார் என்று பிரபல இயக்குனர் சரண் கூறியுள்ளார்.

Samayam Tamil 17 Aug 2018, 6:08 pm
நடிகர் அஜீத், என் முன்னால்தான், நடிகை ஷாலினியிடம் காதலை கூறினார் என்று பிரபல இயக்குனர் சரண் கூறியுள்ளார்.
Samayam Tamil Ajith-Shalini


நடிகர் அஜீத் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ. இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் அஜீத்தும், நடிகை ஷாலினியும் ‘அமர்க்களம்’ படம் ஒன்றாக இணைந்து நடித்தனர். அந்தப் படம் தொடங்கியதில் இருந்தே நடிகர் அஜீத், நடிகை ஷாலினியை காதலிக்கத் தொடங்கிவிட்டாராம்.

இதுகுறித்து ‘அமர்க்களம்’ படம் இயக்குனர் சரண், அஜீத் - ஷாலினி காதல் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் ‘‘அஜீத் தான் தன் காதலை முதலில் ஷாலினியிடம் கூறினார். இதை எப்படி கூறினார் என்று தெரியுமா? ஒரு நாள் பரபரப்பாக ‘அமர்க்களம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடிகர் அஜீத், என்னிடம் வந்து ‘‘சார் என் மொத்த கால்ஷீட்டையும் இந்த படத்திற்கே தந்துவிடுகின்றேன்.

சீக்கிரம் படத்தை எடுத்து முடியுங்கள், இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் இந்த பெண்ணை நான் காதலித்து விடுவேன்’’ என்று ஷாலினியை வைத்துக்கொண்டே அஜீத் சொன்னார். அப்படித்தான் நடிகர் அஜீத், தனது காதலை ஷாலினியிடம் வெளிப்படுத்தினார்’’ என்றார் இயக்குனர் சரண்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்