ஆப்நகரம்

சிம்புவை வைத்து தொடங்கிய கான் திரைப்படம் என்னாச்சு? மனம் திறக்கும் செல்வராகவன்!

சிம்புவை வைத்து தொடங்கிய கான் திரைப்படம் என்னாச்சு? மனம் திறக்கும் செல்வராகவன்!

TOI Contributor 26 Nov 2016, 4:14 pm
தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளிகளில் இயக்குநர் செல்வராகவனும் ஒருவர். தன்னுடைய வித்தியாசமான கதை சொல்லல், மேக்கிங் மூலம் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருப்பவர். இவர் இயக்கிய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தார். தற்போது புத்துணர்ச்சி பெற்று பத்து வருடங்கள் பிரிந்திருந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
Samayam Tamil director selvaraghavan talks about upcoming projects
சிம்புவை வைத்து தொடங்கிய கான் திரைப்படம் என்னாச்சு? மனம் திறக்கும் செல்வராகவன்!


இவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் பணியாற்றியது மறக்கமுடியாதது என்றும், அவர் சிறந்த நண்பர் என்றும் கூறியுள்ளார். தம்பி தனுஷ் படம் இயக்க இருப்பது குறித்து பேசிய செல்வராகவன், நல்ல ஸ்கிரிப்டை ரெடி செய்து வைத்துள்ளார் என்றும் கூறினார். சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்த கான் திரைப்படம் என்னவாயிற்று, வருமா, வராதா என்ற கேள்விக்கு, நீங்கள் தான் கேள்விக்குறி போட்டுவிட்டீர்களே, அது தான் பதில் என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்