ஆப்நகரம்

2.o படப்பிடிப்பில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்த ஷங்கர்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.o திரைப்படத்தின் படப்பிடிப்பில், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இயக்குநர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

TNN 22 Mar 2017, 4:25 pm
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.o திரைப்படத்தின் படப்பிடிப்பில், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இயக்குநர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil director shankar apologises for attacked journalists in 2 o shooting
2.o படப்பிடிப்பில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்த ஷங்கர்


சென்னை திருவல்லிக்கேணியில் 2.ஒ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்றன. அப்போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பத்திரிகையாளர்கள் சிலர் புகைப்படம் எடுத்தனர். அதைக் கண்ட படப்பிடிப்பு குழுவினர், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், ஷங்கரின் உறவினரும், அவரிடம் உதவி இயக்குனராக இருக்கும் பப்பு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், உதவி இயக்குனர்கள் அலெக்ஸ், சுந்தர்ராஜன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து இயக்குநர் ஷங்கர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் தாக்குதல் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறினார். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் நடந்து கொள்வேன் என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து தாங்கள் தொடர்ந்த வழக்கை திரும்ப பெறுவதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

Director Shankar apologises for attacked journalists in 2.o shooting.

அடுத்த செய்தி

டிரெண்டிங்