ஆப்நகரம்

ஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு இயக்கும் சிம்பு தேவன்!

பிரபல இயக்குனர் சிம்பு தேவன், நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

Samayam Tamil 22 May 2019, 2:45 am
பிரபல இயக்குனர் சிம்பு தேவன், நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
Samayam Tamil Simbudevan


‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘புலி’ ஆகிய படங்களை இயக்கியவர்இயக்குனர் சிம்புதேவன். நடிகர் வடிவேலுவை வைத்து இவர் இயக்கிய ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ திரைப்படம் ஒரு சில காரணங்களால் தற்போது தற்காலிகமாக நின்று விட்டது. ஆகையால் சிம்புதேவன் தனது அடுத்தப் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் 6 ஹீரோக்கள் நடிக்கின்றனர். கதையும் 6 விதமாக உள்ளது. மேலும் ஆறு கேமிராமேன், ஆறு எடிட்டர்கள், ஆறு ஹீரோயின், ஆறு இசையமைப்பாளர்கள் என புதுமையாக உருவாக்கப்படவுள்ளது. இதில் நான்கு ஹீரோக்களாக ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நடிக்கவிருப்பதாகவும் இன்னும் இரண்டு ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்திற்கு தமிழின் வல்லின எழுத்துக்களான ‘கசடதபற’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு ஹீரோவின் பெயர்களில் உள்ள எழுத்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியும் டிரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்