ஆப்நகரம்

நடிகர் விமல் ஒரு ஏமாற்றுபேர்வழி! தயாரிப்பாளர் புகார்!

என்னிடம் கோடி கோடியாய் பணம் வாங்கிக் கொண்டு தற்போது என்னை ஏமாற்றி விட்டார் என்று பிரபல தயாரிப்பாளர் சிங்காரவேலன், நடிகர் விமல் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

Samayam Tamil 25 Apr 2019, 4:46 pm
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள படம் ‘களவாணி 2’. இந்தப் படம் மே முதல் வாரம் வெளியாக இருந்தது. இந்நிலையில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் சற்குணம் பேசுகையில், ‘களவாணி-2’ படத்திற்கும் நடிகர் விமலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
Samayam Tamil vimal


இந்நிலையில், தயாரிப்பாளர் சிங்காரவேலன், விமல் ஏமாற்றி விட்டார் என புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில், ‘‘நடிகர் விமல் நடித்து தயாரித்த ‘மன்னர் வகையறா’ படத்திற்காக என்னிடம் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றார். ‘களவாணி-2’ படத்தின் முதல் பிரதியை என்னிடம் ஒப்படைப்பதாக கூறியதை ஏற்று ஒரு கோடி ரூபாய் கொடுத்தேன்.

இதற்கான ஒப்பந்தம் 2018 அக்டோபர் 17ல் பதிவு செய்யப்பட்டது. ஆனால் ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி மற்ற கடன்களை தீர்த்த விமல் என் பணத்தை தரவில்லை. இன்று வரை விமல் எனக்கு 4.32 கோடி ரூபாய் பணம் தர வேண்டும். ஆறு மாதத்திற்குள் பணம் தருவதாக கூறிய விமல் இதுவரை தரவில்லை.

இந்நிலையில் ‘களவாணி-2’ படம் வர்மன்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் வெளியாவதாக அறிவிப்பு வந்தது. என்னிடம் போட்ட ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிடுகின்றனர். இதுகுறித்து விமல், சற்குணம் ஆகியோருக்கு புகார் தெரிவித்தேன். எந்த பதிலும் வரவில்லை. எனவே நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை எடுத்தேன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்