பிரபல நடிகர் விசாகன், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான ரஜினியின் மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் - லதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா. இவரைத்தான் நடிகர் தனுஷ் திருமணம் செய்துள்ளார். இளைய மகள் சௌந்தர்யா. இவர் ‘கோச்சடையான்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தொழிலதிபர் அஷ்வின் என்பவரை திருமணம் செய்தார்.இவர்களுக்கு தேவ் என்ற மகன் உள்ளார். இதனிடையேசௌந்தர்யா & அஷ்வின் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் சென்ற ஆண்டு விவாகரத்து செய்தனர்.
இந்நிலையில் தொழிலதிபர் வணங்காமுடி என்பவருடைய மகன் ‘விசாகன்’ என்பவருடன் சௌந்தர்யா, காதலில் இருந்ததாகவும். இந்த காதல் குறித்து அறிந்த ரஜினிகாந்த் தற்போது இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது.
இதை தொடர்ந்து தற்போது சௌந்தர்யா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளையின் பெயர் ‘விசாகன்’ என்றும் அவரை பற்றிய சில தகவல் வெளியாகியுள்ளது.இவர் ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த நடித்தவர் ஆவார். ‘விசாகன்’ வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்து விட்டு தற்போது தந்தை தொழிலை கவனித்து வருகிறாராம். மேலும் இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் - லதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா. இவரைத்தான் நடிகர் தனுஷ் திருமணம் செய்துள்ளார். இளைய மகள் சௌந்தர்யா. இவர் ‘கோச்சடையான்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தொழிலதிபர் அஷ்வின் என்பவரை திருமணம் செய்தார்.இவர்களுக்கு தேவ் என்ற மகன் உள்ளார். இதனிடையேசௌந்தர்யா & அஷ்வின் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் சென்ற ஆண்டு விவாகரத்து செய்தனர்.
இந்நிலையில் தொழிலதிபர் வணங்காமுடி என்பவருடைய மகன் ‘விசாகன்’ என்பவருடன் சௌந்தர்யா, காதலில் இருந்ததாகவும். இந்த காதல் குறித்து அறிந்த ரஜினிகாந்த் தற்போது இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது.
இதை தொடர்ந்து தற்போது சௌந்தர்யா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளையின் பெயர் ‘விசாகன்’ என்றும் அவரை பற்றிய சில தகவல் வெளியாகியுள்ளது.இவர் ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த நடித்தவர் ஆவார். ‘விசாகன்’ வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்து விட்டு தற்போது தந்தை தொழிலை கவனித்து வருகிறாராம். மேலும் இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.