ஆப்நகரம்

பிக்பாஸில் இருந்து வந்த வையாபுரிக்கு சான்ஸ் கொடுத்த சுந்தர் .சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த நடிகர் வையாபுரிக்கு இயக்குனர் சுந்தர் சி. தன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

TNN 5 Oct 2017, 3:36 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த நடிகர் வையாபுரிக்கு இயக்குனர் சுந்தர் சி. தன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
Samayam Tamil director sundar c giving chance to vaiyapuri
பிக்பாஸில் இருந்து வந்த வையாபுரிக்கு சான்ஸ் கொடுத்த சுந்தர் .சி!


விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை 19 போட்டியாளர்களை கொண்டு துவக்கி வைத்தார் நடிகர் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சி ஒரு வழியாக 100 நாட்களை கடந்து விட்டது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் நன்கு அறியப்பட்டதோடு, தற்போது எல்லோரும் படங்கள், விளம்பரங்கள் என பிஸியாகிவிட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே வீட்டை விட்டு போகின்றேன் என கூறிய நடிகர் வையாபுரி கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியை வென்றுவிடுவாரோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த இவர் தன் வாழ்க்கையில் பல விஷயங்களை தற்போது உணர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கி வரும் ‘கலகலப்பு 2’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகர் வையாபுரி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்