ஆப்நகரம்

போலீஸ்காரர்களுக்கும் மனிதாபிமானம் உண்டு: மிக மிக அவசரம் அக்-11ல் ரிலீஸ்!

போலீஸ்காரர்களுக்கும் மனிதாபிமானம் உண்டு என்பதை எடுத்துக்கூறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள மிக மிக அவசரம் படம் வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Samayam Tamil 23 Sep 2019, 4:25 pm
வி ஹவுஸ் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் அமைதிப்படை – 2, கங்காரு ஆகிய இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி மிக மிக அவசரம் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தையும் அவரே தயாரித்துள்ளார். இப்படத்தில், நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் காவலராகவும், அரீஷ் குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்துள்ளார்.
Samayam Tamil Priyanka


இவர், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். காவலர்களின் வலியை அறிந்து அவர்களுக்கும் மனிதாபிமானம், மண் மீதான பற்று, மக்கள் போராட்டம் ஆகியவற்றில் அக்கறை உண்டு என்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார் சுரேஷ் காமாட்சி.


பெண் காவலர்களுக்கும், தாய்மார்களுக்கும் இந்தப்படம் கண்டிப்பாக பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் இப்படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்