ஆப்நகரம்

திரைப்படமாகும் வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு: பிரபல இயக்குனரின் புதிய திட்டம்!

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கவுள்ளதாக இயக்குனர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Jan 2022, 11:52 am
மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 5 ஸ்டார், பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், ஜீவன் நடித்த திருட்டுபயலே, விக்ரம் நடிப்பில் வெளியான 'கந்தசாமி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் இயக்கத்தில் கடைசியாக 'திருட்டுப்பயலே 2' படம் வெளியாகி இருந்தது.
Samayam Tamil Susi Ganesan
Susi Ganesan


அதனை தொடர்ந்து இந்தியில் திருட்டுப் பயலே படத்தை ரீமேக் செய்த சுசி கணேசன், தற்போது தில் ஹே க்ரே என்ற இந்திப் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு 'வஞ்சம் தீர்த்தாயடா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

1980-களில் மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் தயாராகிறது. இந்தப் படத்தை 4 வி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

விட்ட இடத்தை பிடிச்சே தீருவேன்: மெகா திட்டத்துடன் களமிறங்கும் ஹன்சிகா!
இந்த நிலையில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்து வேலுநாச்சியாரின் வீரம் குறித்து பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டை குறிப்பிட்டு வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் சுசி கணேசன்.


இது தொடர்பாக அவர் தனது பதிவில், தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீரப் பேரரசி வேலுநாச்சியாரின் வாழ்க்கை வீர வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன். இப்படத்தின் மூலம் வெள்ளைக்காரனோடு போரிட்டு, வென்ற முதல் சுதந்திரப் போராட்ட பெண்மணி வீரப் பேரரசியின் வீரத்தையும், சுதந்திர வேட்கையையும், தற்போது உள்ள தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதோடு, உலகமே கொண்டாட வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை பிறக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்