ஆப்நகரம்

விஜய், அஜித்க்கு சிம்ம சொப்பனமாக இருந்தவன் பிரசாந்த்! - நடிகர் தியாகராஜன்!

நடிகர் பிரசாந்த்தின் சினிமா பயணமே திசை மாறி போனதற்கு இந்த சம்பவங்கள்தான் காரணம் என அவரின் தந்தை நடிகர் தியாகராஜன் கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Sep 2018, 4:58 pm
நடிகர் பிரசாந்த்தின் சினிமா பயணமே திசை மாறி போனதற்கு இந்த சம்பவங்கள்தான் காரணம் என அவரின் தந்தை நடிகர் தியாகராஜன் கூறியுள்ளார்.
Samayam Tamil prasanth


நடிகர் பிரசாந்த், ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் ஆரம்பித்து தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை கொடுத்தார். அப்போது நடிகர்கள் அஜித், விஜய்யை விட இவருக்குத்தான் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். விஜய், அஜித்தே இவருடைய படங்கள் வெளியாகிறது என்றால் அவர்களே பயப்படுவார்கள். அந்த அளவிற்கு வளர்ந்து வந்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்கு இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் ஏராளமான ரசிகர், ரசிகைகள் இருந்தனர்.

ஆனால், தற்போது இவரின் மார்க்கெட் தற்போது அதளபாதளத்திற்கு சென்றுள்ளது. மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க போராடி வருகின்றார். தற்போது ‘ஜானி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த், ஐந்து வருடம் திருமணம் மற்றும் குடும்பப் பிரச்சனையால் மிகவும் சோகத்தில் இருந்தாராம், பல நாட்கள் நீதிமன்றத்திற்கு சென்று வரவே நேரம் சரியாக இருந்தது. இதனால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையாம். ஒரே நேரத்தில் குடும்பம், சினிமா என இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் பிரசாந்த் மிகவும் கஷ்டப்பட்டார் என பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்