ஆப்நகரம்

'ஜெய் பீம்' படத்தால் உண்மையை போஸ்ட் மார்டம் செய்துள்ளோம் - தா.செ. ஞானவேல்

'ஜெய் பீம்' படத்தில் நடித்த கலைஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 5 Jan 2022, 11:54 am
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான 'ஜெய் பீம்' அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது. தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்திருந்தார்.
Samayam Tamil Jai Bhim
Jai Bhim


'ஜெய் பீம்' படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் 'ஜெய் பீம் ' படத்தின் கலைஞர்களுக்கும், படத்தின் மையக் கருவாக அமைந்த மறைந்த ராஜாக்கண்ணு குடும்பத்தினருக்கு உதவிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுக்கும் அக்கட்சி சார்பில் பாராட்டு விழா சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , ஜி.ராமகிருஷ்ணன் , வாசுகி ஆகியோர் பங்கேற்றனர்.
நடக்க முடியாமல் வீல் சேரில் வந்த டிடி: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
இந்த நிகழ்ச்சியில் பேசிய 'ஜெய் பீம்' படத்தின் இயக்குநர் ஞானவேல், கலை மக்களுக்கானது என நான் உணர பல இடதுசாரி படைப்புகள் காரணமாக இருந்தது. கம்யூனிச இயக்கத்தை படமாக்கவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி கதை எழுதும்போது கதைக்குள் அவர்கள் வந்துவிட்டனர். கடலூரில் 1993 முதல் 1996 வரை இதுபோல கம்யூனிச இயக்கங்கள் மூலம் 12 வழக்குகள் நடத்தியுள்ளன. 60 இருளர் கிராமங்களை சென்று பார்த்தேன், அங்கு பல ராஜாக்கண்ணுகள் இருக்கின்றனர்.

ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கமாக ஜெய்பீம் இருந்ததால் அதை படப்பெயராக வைத்தேன். 30 ஆண்டுக்கு பிறகு இப்படத்தின் மூலம் உண்மையை போஸ்ட் மார்டம் செய்துள்ளோம். படத்தில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் படங்களை காட்டியிருந்தேன். கருப்பு, நீலம், சிவப்பு இணைந்தால் தான் இந்தியாவை ஜனநாயகமாக்க முடியும். காப்பாற்ற முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார் இயக்குனர் ஞானவேல்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்